மக்களவை தேர்தல் தேதியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ள X தள பதிவில், பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது.

அதனால் தான் முதற்கட்டம் தேர்தல் நடைபெற போகிற தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை என தன் கட்சி பிரச்சார கூட்டங்களை முன்னரே பிரதமர் மோடி  நடத்தி உள்ளார். இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என பதிவிட்டுள்ளார்.