இந்தியாவில் அடுத்த இரண்டு வருடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன்படி 1570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவுக்கான கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன் மூலம் மருத்துவ உபகரணங்கள் பிரிவானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதுள்ள 89 ஆயிரத்து 957 கோடியிலிருந்து 4,08,897 கோடியாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக 15,700 செவிலியர் படிப்பு முடித்த பட்டதாரிகள் வெளி வருவார்கள். நாட்டில் தரம் வாய்ந்த போதிய மற்றும் சம அளவிலான செவிலியர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.