“எனக்கு நிஜமாவே இப்ப பேசுறதுக்கு வார்த்தையே வரலைங்க, இந்தத் தொடர் தோல்வியும் அவமானமும் என்னால சுத்தமா தாங்கிக்கவே முடியல, இனிமே சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை!” என்று இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த படுதோல்வி குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குமுறலை அதிர்ச்சி கலந்த பதிவிட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
I’m truly speechless. Dumbfounded. Gobsmacked.
This is one humiliation too many. There is literally nothing to be said. #INDvENG @BCCI @imAagarkar @GautamGambhir pic.twitter.com/bHPA4GHHGT
— Shashi Tharoor (@ShashiTharoor) July 9, 2026
“>
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 சாம்பியன் பட்டத்தை வென்ற வெறும் நான்கு மாதங்களிலேயே இந்திய அணி தடம் புரண்டு, முதலில் அயர்லாந்துக்கு எதிராக 0-2 என்ற கணக்கிலும், தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 3-0 என்ற கணக்கில் தொடரையும் கோட்டை விட்டுள்ளது.
பிரிஸ்டலில் நடந்த போட்டியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் (80 ரன்கள்) அதிரடியால் இந்தியா 158 ரன்கள் எடுத்த போதிலும், இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் (79*) மற்றும் பில் சால்ட் (59*) ஆகியோரின் அசுரத்தனமான பேட்டிங்கால் வெறும் 13.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து இலக்கை எட்டி மிரட்டியது; மேலும் 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்து தற்பொழுது தங்களது கௌரவத்தைக் காப்பாற்ற சனிக்கிழமை சவுதாம்டனில் நடக்கும் கடைசிப் போட்டியை நோக்கி நகர்கிறது.
