சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இவரின் முன்னாள் கணவர் தினேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். ‘தினேஷோடு யாரும் வாழ முடியாது அப்படி வாழ்ந்தால் ஓடித்தான் போக வேண்டும்’ என விசித்ரா சமீபத்தில் பேசியிருந்தார். தற்போது ரச்சிதா பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ‘எல்லோரும் உங்க வேலையை பார்த்தால் போதும்.

நாங்களும் எங்களுடைய வேலைகளை பார்க்கிறோம். மற்றவர்கள் வாழ்க்கையில் தலையிடாதீர்கள். இதோடு நிப்பாட்டுங்க!’ என பதிவிட்டுள்ளார். அவர் விசித்திராவைதான் மறைமுகமாக சொல்வதாக கூறப்படுகிறது.