கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.