சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பெருநகர காவல்துறை பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தின் நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கல்வித்துறையில் மகத்தான சாதனையை நாம் படைத்து வருகிறோம். அதில் முக்கியமான சாதனைதான் காலை சிற்றுண்டி திட்டம்.

வயிற்றுப் பசியை போக்கிவிட்டாலே, அறிவுப் பசிக்கு உணவு கிடைத்துவிடும். இதை மனதில் வைத்துதான் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்பட்டது.நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.