தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த பணிக்கு அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செல்வார்கள். ஆனால் விடைத்தாள் திருத்த பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசியர்கள் சரியாக வருவதில்லை என்று புகார் எழுந்தது.

இந்நிலையில் விடைத்தாள் திருத்த பணிகளுக்கு தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை அனுப்பி வைத்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது. மேலும் மதிப்பீட்டு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நாளைக்குள் நியமண ஆணை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.