கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துறை(எ)அருள்தாஸ்‌. இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தை உபயோகித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பெயரில் போலீசார் அருள்தாஸ் வீட்டை சோதனை செய்தனர். அவரது வீட்டில் நாட்டுத் துப்பாக்கியும், அதற்கு பயன்படுத்தும் வெடி மருந்தையும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அருள்தாசை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.