பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் தான் மெர்சி சித்ரா. இவர் கலைஞர் டிவி, சத்தியம் டிவியில் பணிப்புரிந்துள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் டப்பிங் கலைஞராகவும் இருந்து உள்ளார். கடந்த ஜனவரியில் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகிய துணிவு திரைப்படத்தில் மெர்சி சித்ரா நடித்திருக்கிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மெர்சி சித்ரா பல அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது “செய்தி வாசிப்பாளராக இருப்பது சாதாரண வேலையில்லை. அது மிகவும் கடினமான ஒன்று. எனக்கு சினிமாவில் பட வாய்ப்பு வந்தபின் ஆடிஷன் போனேன். எனினும் பலர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பார்கள். அதையும் தாண்டி வந்தால் என்ன போட்டோவில் பார்க்கையில் கலராக இருந்தீர்கள், நேரில் கருப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள. நான் சந்தித்தது அனைத்துமே பிரச்சனை தான். இதெல்லாம் நமக்கு தேவையா என்று செய்தி வாசிப்பாளாராக தொடர்கிறேன்” என மெர்சி சித்ரா கூறியுள்ளார்.