சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, பெற்றோர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பச்சிளம் குழந்தை இடைவிடாமல் அழுது கொண்டிருக்கும் தருணத்தில், ஒரு நர்ஸ் (செவிலியர்) அந்தக் குழந்தையை மெதுவாக ஒரு படுக்கையில் படுக்க வைத்து, தாடை மற்றும் நெற்றி பகுதிகளில் மென்மையான மசாஜ் செய்வதை காணலாம். நர்ஸின் இந்த மெல்லிய தொடுதலால் குழந்தை ஓரிரு நொடிகளில் கொட்டாவி விட்டபடியே அமைதியாக தூங்கிவிடுகிறது.

இந்த வீடியோவில் காணப்படும் நுட்பம், குழந்தைகளை தூங்க வைக்கும் ஒரு தனித்துவமான முறை எனப் பலரும் வர்ணித்து வருகின்றனர். குறிப்பாக, தூங்க சிரமப்படுகிற குழந்தையை பராமரிக்கிற பெற்றோருக்கு, இந்த மசாஜ் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “நாங்களும் இதை முயற்சி பண்ணலாம்”, “எப்படி தூங்க வைக்குறது?” என வியப்புடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சிலர் இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தாலும், பெரும்பாலானோர் அந்த நர்ஸின் அனுபவத்தையும், குழந்தைகளை சமாளிக்கும் திறமையையும் பாராட்டி வருகின்றனர். மேலும் தற்போது இந்த வீடியோ 10 மில்லியனுக்கும் மேல் பார்வைகள் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ள நிலையில், குழந்தைகளை பராமரிக்கும் புதிய முறைகளை அறிந்து கொள்ள விரும்பும் பல பெற்றோர்களுக்குத் தூக்க மேலாண்மை சாத்தியமில்லை என கருதப்பட்ட சந்தர்ப்பங்களிலும் தீர்வுகளை வழங்கும் காணொளியாக இது மாறியுள்ளது.