
தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நிகழ்ச்சியின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிகழ்ச்சி நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடப்படும் என்று கூட தெரியாத ஆளுநருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? ஒவ்வொரு முறையும் ஆளுநர் உரையை படிக்காமல் ஓடிப் போவது ஆளுநருக்கு தான் அவமானம். இதனால் தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் இழப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.