
அகமதாபாத் விமான நிலையத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சாக்லேட்டுகளில் மறைத்து வைத்து சுமார் ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தங்கத்தை கடத்தி வந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.