தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வந்தன.
இது அவரது லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் மனவருத்தத்தையும், ஒருவித சோர்வையும் ஏற்படுத்தியிருந்தது. எதிர்க்கட்சிகள் மற்றும் சில விமர்சகர்கள் இந்தச் சர்ச்சைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வந்த நிலையில், தனது அமைதியான ஆனால் வலிமையான செயல்பாட்டின் மூலம் ஒட்டுமொத்தப் பிம்பத்தையும் விஜய் மாற்றியமைத்துள்ளார்.
வீண் விவாதங்களுக்குப் பதில் சொல்லாமல், மக்கள் நலத் திட்டங்களின் மூலம் தனது அரசியல் முதிர்ச்சியை அவர் வெளிப்படுத்திய விதம் அவரது ஆதரவாளர்களுக்குப் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச மகளிர் தின விழாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக அவர் அறிவித்த ‘ஸ்மார்ட் பேனிக் பட்டன்’, ‘அன்னபூரணி சூப்பர் 6’ மற்றும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ போன்ற புரட்சிகரமான அறிவிப்புகள், கடந்த இரண்டு நாட்களாக உலவி வந்த அனைத்து அவதூறுகளையும் ஒரு நொடியில் தூசி போல ஊதித் தள்ளிவிட்டன.
This must be the most satisfying day as a political leader for @TVKVijayHQ yet 💥💥
Whattey turn around from all the negativity in the last 2 days…
See how ladies welcoming this Election manifesto with huge joy n hope 👏👏#TVKmanifesto#TVKWomensDayEvent pic.twitter.com/SHFrSY0C7M
— Iʀsʜᴀᴅ (@irshad5005) March 7, 2026
“>
வதந்திகளைப் பற்றி கவலைப்படாமல், ஆக்கப்பூர்வமான திட்டங்களின் மூலம் மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துள்ள விஜய்யின் இந்த அணுகுமுறை, “செயலால் பதில் சொல்வதே ஒரு சிறந்த தலைவனுக்கு அழகு” என நெட்டிசன்களால் புகழப்படுகிறது. சர்ச்சைகளை முறியடித்து, மீண்டும் மக்கள் மனங்களில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள விஜய்யைக் கொண்டாடி வரும் அவரது ஆதரவாளர்கள், இதுவே 2026-க்கான வெற்றியின் தொடக்கம் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
