
ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளராக வேலை பார்ப்பவர் வைகுந்த நாத் சாரங்கி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் வைகுந்த நாத் சாரங்கிக்கு சொந்தமான 9 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில் சுமார் 2.1 ஒரு கோடி ரூபாய் பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே ஊழல் தடுப்பு பிரிவினர் திடீரென வந்ததால் அரசு பொறியாளர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் வழியாக 500 ரூபாய் நோட்டுகளை மூட்டை கட்டி வீசினார்.
இதனால் அந்த பகுதி முழுவதும் ரூபாய் நோட்டுகளாக சிதறி கிடந்தது. அவற்றையும் அதிகாரிகள் மீட்டனர். அந்த பணத்தை எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .