அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று இபிஎஸ்-க்கு சாதகமாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டதால் தனிக்கட்சி தொடங்கி, இபிஎஸ்-க்கு எதிரான அரசியலை முன்னெடுக்க  ஆயத்தமாகி வருகிறார்.

அவர் தனது கட்சிக்கு அதிமுக பெயரிலேயே “அம்மா திராவிட முன்னேற்ற கழகம்” என பெயர் வைக்க உள்ளதாகவும், கட்சியின் சின்னமாக இரட்டை மின்கம்பம், கட்சியின் கொடி கருப்பு, சிவப்பு நடுவில் இரட்டை மின்கம்பம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.