2024 நாடாளுமன்றத் தேர்தல் தான், நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “2019ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். வீட்டில் தூங்கியவர்களை கூட்டி வந்து பூத்துக்கு இரண்டு வாக்கு போட்டிருந்தால் கூட வெற்றி பெற்றிருப்பேன். ஆனால் அது நடக்காமல் போனது வருத்தமாக இருந்தது” என்றார்