இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோ என்றாலே சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நியூயார்க் வன பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மான் குட்டிகள் காட்டுப்பகுதிக்குள் கூட்டமாக நடந்து கொண்டிருந்தபோது ஒரு மான் மட்டும் தனியாக பிரிந்து சென்றது. அந்த மான்குட்டி எதிர்பாராத விதமாக ஒரு குளத்தில் விழுந்த நிலையில் அதற்கு எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை.

இதனை கவனித்த ஒரு யானை மெதுவாக தன் தும்பிக்கையை வைத்து அந்த மான்குட்டியை மீட்டு வெளியே விட்டது. அது தரைக்கு வந்ததும் தன்னுடைய கூட்டத்துடன் மீண்டும் சேர்ந்தது. இது வனத்தில் நடந்த ஒரு அற்புத காட்சியை நமக்கு அழகாக காட்டியுள்ளது. மேலும் விலங்குகளும் எவ்வளவு பாச உணர்வோடு செயல்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் நிலையில் பலரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pubity (@pubity)