தொண்டர்களின் விருப்பப்படியே பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமல்ல, வாக்களித்த மக்கள்தான் எங்களுக்கு முக்கியம். ஆட்சி முக்கியம் என நினைத்திருந்தால் பாஜக கூட்டணியில் நிலைத்திருப்போம் என்றார். மேலும், அதிமுகவை உடைக்க, சின்னத்தை முடக்க சிலர் முயற்சி செய்தனர் என ஓபிஎஸ்ஸையும் தாக்கிப் பேசியுள்ளார்.