கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகியதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 1989 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய பாக்யராஜ் சில ஆண்டுகளில் கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இதற்கு தொழில் பாதிக்கப்பட்டதும் கட்சி ஆரம்பித்த பிறகு படம் சரியாக ஓடாத காரணத்தாலும் அரசியலில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.