ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது என கூறினார். அதுமட்டுமன்றி பவர் பிளேயில் நரைன் கொடுத்து அழுத்தத்தை சமாளிக்க முடியாததே மோசமான தோல்விக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.