ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் தரப்பு போட்டியிட, தமாகா ஆதரவு அளித்துள்ளது; ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார். இதனால், தனித்து களமிறங்குவாரா (அ) ஆதரவு அளிப்பாரா என்பதற்கு சற்றுநேரத்தில் விடை கிடைக்கும்.