ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து டி ப்ரூயின் விலகியுள்ளார்..

ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 2 டெஸ்ட் தொடரில் வென்ற ஆஸ்திரேலியா அணி 2 : 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜனவரி 4ஆம் தேதி (நாளை) சிட்னியில் தொடங்குகிறது. இந்தநிலையில் தென் ஆப்பிரிக்கா சார்பில் விளையாடிய தியூனிஸ் டி ப்ரூயின் தனது மனைவியின் முதல் பிரசவத்திற்காக சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனைவியின் பிரசவத்திற்காக டி ப்ரூயின் பங்கேற்க மாட்டார் என தெரிவித்திருந்தது.