தெலுங்கு திரையுலகின் மெகா பவர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். நடிகர் சிரஞ்சீயின் மகனான இவருக்கு தென்னிந்தியாவின் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்கர் அகாடமியின் நடிகர் குழு உறுப்பினராக ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் விருது பெறுவதை கவுரமாக கருதும் கலைஞர்கள், அதன் குழுவின் அங்கமாக இருப்பதை பெரும் வாய்ப்பாக கருதும் சூழலில், ராம் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.