கேரளாவில் கபீர் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஷாகினா (35) என்கிற மனைவியும், சாரா (10) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் பாரதப்புழா ஆற்றுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் ஷாகினாவின் தங்கை மகனான புவாத் சனின் என்ற 12 வயது சிறுவனும் சென்றுள்ளான். இதில் கணவன் மனைவி இருவரும் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் ஆற்றங்கரையோரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி திடீரென ஆற்றுக்குள் விழுந்த நிலையில் அவனை காப்பாற்ற சிறுவன் தண்ணீரில் இறங்கினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் உடனடியாக ஆற்றில் இறங்கினர். ஆனால் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனைப் பார்த்து அந்த பகுதி மக்கள் அவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில் ஷாகினா மட்டும் மீட்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்கள் 4 பேரின் சடலங்களும் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.