உலகம் முழுவதும் சென்ற வருடம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இப்போது நிலவும் பணவீக்கத்துக்கு மத்தியில் நிர்வாகத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனங்கள் கருத்து தெரிவித்தது.

அத்துடன் கடந்த 2020ம் வருடத்தில் பரவிய கொரோனா தொற்றின்போது ஐடி துறைகளில் பணியாளர்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஐடி துறைகளில் அதிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இப்போது நிலைமை சரியாகி இயல்புநிலை திரும்புவதால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது.

பிற நிறுவனங்களை தொடர்ந்து இப்போது முன்னணி நிறுவனமான அமேசான் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சார்லி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த அறிவிப்பு அமேசான் நிர்வாக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.