ஆப்பிள் நிறுவனத்தின்  தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது  ஐபோன், ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றில் பாதுகாப்புக் குறைபாட்டை மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ‘செர்ட்-இன்’ கண்டறிந்துள்ளது. இதனால் ஆப்பிள் கேட்ஜெட்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து பயனாளிகளின் தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Cert-in குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, ஆப்பிள் விரைவில் ஒரு புதிய ஓ.எஸ். புதுப்பிப்பை வெளியிடலாம்.