தமிழ்நாடு அரசுக்கு  ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று  தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், பல உயிர்களை வாங்கிய ஆன்லைன் விளையாட்டுக்கு மீண்டும் அனுமதி வந்திருமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.