ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் ஒய்சிபி தலைவர்கள் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் பேரன் நடிகர் ஜூனியர் என்டிஆர் தொடர்பான போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓங்கோலில் சிலர் ஆந்திராவின் அடுத்த முதல்வர் ஜூனியர் என்டிஆர் என்று கூறி பிளக்ஸ் வைத்துள்ளனர். இது ஆந்திர அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அதனை நீக்கி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மருமகன் தான் ஜூனியர் என்டிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.