பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல டைரக்டர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனங்கள் ஒரு க்கம் இருந்தாலும், முதல் நாள் மட்டுமே ரூ.140 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. ராமர், அனுமனை அவதூறு செய்யும் விதமாக படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு ஆதிபுருஷ் படத்தின் வசனம் உலகத்திலுள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. எனவே ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.