தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அதன்படி தற்போது தனியாக கல்வி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் விதமாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கு https://ssp.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ஃப்ரீ மெட்ரிக் மற்றும் தூய்மை பணிபுரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம், மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், உயர்கல்வி சிறப்பு உதவி தொகை திட்டம் மற்றும் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்களுக்கு இந்த இணையதளம் மூலமாக இனி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் வங்கியுடன் இணைக்காத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.