பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசு கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 50000 ரூபாய் வரை கடன் பெறலாம். அதாவது முதல் கட்டமாக 10 ஆயிரம், இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதனை சரியாக திருப்பி செலுத்தினால் 50 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் கடன் பெற விரும்பினால் உங்களிடம் ஆதார் கார்டு மட்டும் இருந்தாலே போதும். வேறு எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை. அரசு வங்கிகளில் இந்த திட்டத்தின் கீழ் நீங்களும் கடனுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.