ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில்  UIDAI, அதன் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் புதிய வசதியைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது குடிமக்கள் தங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட தங்கள் மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளை சரிபார்ப்பதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் எண் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டால், மக்கள் தங்களுடைய திரையில் காட்டப்படும், “நீங்கள் உள்ளிட்ட செல்போன் எண் ஏற்கனவே எங்கள் பதிவுகளுடன் சரிபார்க்கப்பட்டது” போன்ற செய்தியைக் காண்பார்கள். மேலும், mAadhaar செயலியில் ஆதார் அம்சத்தை சரிபார்க்கலாம்.