தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தவெக தலைவர் விஜய் புதிய வரலாறு படைத்துள்ள நிலையில், கடல் கடந்தும் அவருக்கு வாழ்த்துகளும் கோரிக்கைகளும் குவியத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் விஜய்க்கு விடுத்துள்ள உருக்கமான அழைப்பு இப்போது உலகத் தமிழர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. “விஜய் தனது தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் சார்ந்து பல முக்கிய விஷயங்களைப் பேசியிருந்தார்; இப்போது அவர் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைந்தவுடன் அவர் கட்டாயம் இலங்கை வர வேண்டும்” என ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய்யின் வருகை மூலம் அங்குள்ள பல தீர்க்கப்படாத இனப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதால், தமிழக அரசியலைத் தாண்டி ஈழத் தமிழர்கள் மத்தியிலும் “தளபதி” மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடைக்கிறது.
