தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்த நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் நிதிநிலை சரியில்லாததால் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் தர முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது நிதிநிலை சற்று சரியானதும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் திட்டத்தை ஒரு சிலர் பொய் வதந்திகளை பரப்பி முடக்க நினைத்தனர். திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றும் சிலர் கூறினார்கள். ஆனால் அறிவித்து விட்டால் எதையும் நிறைவேற்று காட்டுபவன் நான் இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.