தமிழகத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி ஆடிப்பெருக்கை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில், சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எழும்பூர் மற்றும் நாகர்கோவிலுக்கு இன்று இரவு 10.45 மணிக்கு, தாம்பரம் மற்றும் திருச்சிக்கு இன்று இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வார விடுமுறை என்பதால் நெரிசலை தவிர்ப்பதற்காக முன் பதிவு இல்லா பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.