திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மதன் (22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மதனை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 27 வருடங்கள் கடுங் காவல் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இதைத் தொடர்ந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.