தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்களின் மறு பிரதிக்கு இன்று முதல் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு (தாள் 1, தாள் 2) தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களின் மறு பிரதிக்கு இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.