தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம். ஆனால் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என கூறி நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழக அரசின் விதியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.