தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் ஏப்ரல் 27 முதல் நேற்று(மே 3) மாலை 5 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி உடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், அதனை இன்று மாலை வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு  பிறப்பித்துள்ளது. எனவே விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.