திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவின் கே.என்.நேரு, பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். அப்போது வாகனத்தில் இருந்த திமுக பிரமுகர் ஒருவர், கே.என்.நேரு குறித்துப் பேசுகையில் திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கினார்.

​இதைக் கண்டு டென்ஷனான கே.என்.நேரு, அந்தப் பிரமுகரின் கையில் இருந்த மைக்கை சட்டென பிடுங்கிவிட்டு, உடனடியாக வாகனத்தைக் கிளப்பக் கூறினார். பிரச்சார வாகனத்தில் நடந்த இந்த பரபரப்பான வீடியோ காட்சி இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.