
சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு வாந்தி, கழுத்து வலி, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள் சாப்பிட மறுத்து, தொடர்ந்து அழும் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு மூளைக்காய்ச்சல் எனப்படும் என்செபாலிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சூரியா மருத்துவமனையின் மூத்த குழந்தை மருத்துவர் டாக்டர் தீபசரிகரன் கூறுகையில், மழைக்காலத்தில் காய்ச்சல், தலைவலி என்பது சாதாரணமானது தான். ஆனால் மருந்து கொடுத்தும் 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அல்லது குழந்தைகள் சோர்வாக இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். காய்ச்சல் 103 டிகிரி வரை கொதித்தாலும், தொடர்ந்து அழுதாலும், சோர்வாக இருந்தாலும், சிறிதளவு பால் கூட குடிக்க முடியாமல் இருந்தாலும், 6 முறைக்கு மேல் வாந்தி எடுத்தாலும், மூச்சு விடுவதில் சிரமம், இருமலுடன் மூச்சு விடும் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றார்.
மூளைக்காய்ச்சல் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். பள்ளிகள் திறக்கும்போது ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் மற்றவர்களுக்கு எளிதாக பரவும். பல குழந்தைகளுக்கு குழந்தை பருவ தடுப்பூசிகள் முழுமையாக எடுக்கப்படுவதில்லை.
குறிப்பாக குழந்தைகளுக்கு நான்கு வயது நிறைவு பெறும்போது எடுக்க வேண்டிய நான்காவது பூஸ்டர் தடுப்பூசி விடுபடுகிறது. இது தவறு. அதிகமாக சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் சுவையின்புறா காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும். அதிகமாக காய்ச்சல், சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு கைக்குட்டை மற்றும் கையால் இருமும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் எனக் கூறினார்.