
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தொலைதூரத்திற்கு செல்லும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினசரி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 535 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.
இதனை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நாளொன்றுக்கு டிசிசி பணியாளர்களுக்கு ரூ.882, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872 ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.535 ஆக இருந்த நிலையில் ஊதியம் உயர்த்தப்பட்டதிற்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.