
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3585 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்க அனுமதி அளித்த பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.