மருத்துவ அவசர காலங்களில் மருத்துவர்களுக்கு இணையாக செவிலியர்களும் தங்களின் பணியை சிறப்பாக செய்து பல உயிர்களை காப்பாற்றுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் அரசு செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் மாதத்தில் நான்கு நாட்களுக்கு மேல் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையில் 10 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கும் சூழ்நிலை உள்ள செவிலியர்கள் மருத்துவ வாரிய அதிகாரிகள் முன் ஆஜராகி உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது m