தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால் எஞ்சியுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்றுடன் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் நிறைவடைகிறது.

எனவே மாணவர்கள் https: //www.tngasa.in/ என்ற இணையதளத்தில் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். இவர்களை கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8ஆம் தேதி தொடங்குகிறது.