சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழில் பழகுநர் இடங்களை தேர்வு செய்த உதவி தொகை உடன் பயிற்சி பெறலாம்.