
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நடந்து முடிந்த இந்த பொதுத் தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .அதன் பெயரில் சென்னையில் சீர்மிகு பாராட்டு விழா நடத்துவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.