மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவே பாஜக மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரியின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அந்த மாநில துணை முதல்வராக பதவி ஏற்றார். இது குறித்து பேசிய அவர், மாநில வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. அனைத்து ஜாதி மற்றும் மதத்தை சார்ந்த மக்களை காப்பது தான் நமது பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்