அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கலந்த ஜனவரி 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து ஜனவரி 23 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அயோத்தியில் பாலராமரை தரிசிக்க பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டிருப்பதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இரண்டு மணி நேர இடைவெளியுடன் காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.