கோவாவிற்கு ஹனிமூன் அழைத்துச் செல்லாமல் கணவர் அயோத்திக்கு அழைத்துச் சென்றார் என்று கூறி பெண் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றும் தன்னுடைய கணவர் அவரது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு ஹனிமூன் வெளிநாடு செல்ல முடியாது என்றும் வேண்டுமானால் கோவா உள்ளிட்ட உள்நாடு சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என்றும் கூறியதாக விவாகரத்து மனுவில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறியபடி கோவாவிற்கு அழைத்துச் செல்லாமல் அவரது பெற்றோரை எங்கள் பயணத்தில் இணைத்துக் கொண்டு அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் என்று அந்த பெண் கூறியுள்ளார். கோவிலுக்கு சென்றதாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.